சிவகாசி:
ரூ.1200 கோடி மதிப்பில் பட்டாசுகள் விற்பனையாகாமல் உள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். பட்டாசு தொழிலே கேள்விக்குறியாகிவிட்டதாக உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சிவகாசி பட்டாசுகள் பெருமளவில் தேக்கமடைந்தன. தமிழ்நாட்டிலும் பட்டாசு விற்பனை மந்தமானதால் உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர். கொரோனாவால் வழக்கத்தைவிட 50 சதவீதம் குறைவாகவே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.தில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால் பட்டாசுகள் முற்றிலும் தேக்கமடைந்துள்ளது.